வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவு

அசாம் மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவாகியிருந்தது. 

News image
அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவு
Updated On :7 ஜூலை 2021, 5:22 am

PTI


குவகாத்தி: அசாம் மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவாகியிருந்தது. 

அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக அண்டை மாநிலங்களான மேகாலயம், மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதிகள் மற்றும் வங்கதேசத்தின் ஒரு சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இன்று காலை 8.45 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கத்தின் மையம் அசாம் மாநிலத்தின் கோல்பாரா பகுதியில் அமைந்திருந்ததாகவும், இந்த நிலநடுக்கம் 14 கிலோ மீட்டர் ஆழம் வரை உணரப்பட்டதாகவும் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதும் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறி திறந்தவெளிப் பகுதியில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.