ஹிமாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் மறைந்ததையொட்டி, ஜூலை 8 முதல் 10 வரை 3 நாள்கள் துக்கம் அனுசரிக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
வீரபத்ர சிங் (87) 9 முறை எம்எல்ஏ.,வாகவும், 5 முறை எம்பி.,யாகவும் இருந்துள்ளார். 6 முறை ஹிமாசல முதல்வராக இருந்துள்ளார். அவருக்கு கடந்த ஏப்ரல் 12 மற்றும் ஜூன் 11 என இரண்டு முறை கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தபோதிலும், கரோனாவுக்குப் பிந்தைய பிரச்னைகளால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வியாழக்கிழமை காலை அவரது உயிர் பிரிந்தது.
வீரபத்ர சிங்குக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜூலை 8 முதல் 10 வரை 3 நாள்கள் துக்கம் அனுசரிக்க ஹிமாசல அரசு முடிவு செய்துள்ளது.