ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழை காரணமாக சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், ஜம்மு-ஸ்ரீநகா் நெடுஞ்சாலை சனிக்கிழமை மூடப்பட்டது. இதனால் நூற்றுக் கணக்கான வாகனங்கள் சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவா் கூறியதாவது:
பலத்த மழை பெய்ததால், ராம்பன் மாவட்டத்தில் உள்ள மகா்கோட் பகுதியில், ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 270 கிலோ மீட்டா் நீளம் கொண்ட இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனரக வாகனங்களும் இலகு ரக வாகனங்களும் சாலையில் ஆங்காங்கே பாதி வழியில் நிறுத்தி வைக்கப்பட்டன.
மண்சரிவை அகற்றி சாலையை சீரமைக்க இயந்திரங்களின் உதவியுடன் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். சாலையை சீரமைக்க 12 மணி நேரத்துக்கு மேலாகும் என்பதால் வாகனங்கள் திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இதனிடையே, சாலையை சீரமைக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது. சாலை சீரமைக்கப்பட்டது குறித்த தகவல்கள் தெரிந்த பிறகு பொதுமக்கள் பயணத்தை திட்டமிட வேண்டும் என்றும் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

