ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

''பாஜகவின் வெற்றிக்கு காரணம் இதுதான்'' - யோகி ஆதித்யநாத் அதிரடி

உத்தரப் பிரதேச பாஜக அரசின் கொள்கைகள் மீது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்குக் காரணம் என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.   

News image
கோப்புப்படம்
Updated On :11 ஜூலை 2021, 6:39 am

DIN


உத்தரப் பிரதேச பாஜக அரசின் கொள்கைகள் மீது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்குக் காரணம் என அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.   

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியிடங்களுக்கான தேர்தலில் பாஜக பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யநாத், ''தொண்டர்களின் கடுமையான உழைப்பும், கட்சியின் கொள்கைகள் மீது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையுமே பாஜகவின் வெற்றிக்கு காரணம்'' என தெரிவித்தார். 

மேலும், ''இந்தத் துயரமான கரோனா காலகட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பணி செய்ததன் காரணமாகவே பாஜகவிற்கு இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது. தேர்தல் பணியின் போது தொண்டர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் ஒருசிலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். அவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்குவதோடு. வேலைவாய்ப்பையும் அளிக்கவுள்ளது'' என தெரிவித்தார். 

இரண்டாவது அலையில் இந்தியா தீவிரமாகப் பாதிக்கப்பட்டதற்கு 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஒரு முக்கியக் காரணியாகக் கூறப்பட்டது. தற்போது கரோனாவின் தாக்கம் முழுமையாக குறையவில்லை. விரைவில் மூன்றாவது அலை இந்தியாவைத் தாக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பெரிதும் விமரிசிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த விமரிசனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக யோகி ஆதித்யநாத்தின் பேட்டி அமைந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.