புதிதாக கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கான செய்தி

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, பல்வேறு பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்து கடந்த ஆண்டை ஒப்பிடுக்கையில் இரண்டு மடங்காகக் கூட அதிகரித்துள்ளது.
புதிதாக கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கான செய்தி
புதிதாக கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கான செய்தி
Published on
Updated on
1 min read


புது தில்லி: கரோனா பொதுமுடக்கம் காரணமாக, பல்வேறு பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்து கடந்த ஆண்டை ஒப்பிடுக்கையில் இரண்டு மடங்காகக் கூட அதிகரித்துள்ளது.

உணவு பொருள்கள் முதல் கட்டுமானப் பொருள்கள் வரை, விலை உயர்வ சந்திக்காத பொருள்களே இல்லை என்று கூறலாம்.

அந்த வகையில் தற்போது, கரோனா பொதுமுடக்கம் காரணமாக, விற்பனையில் மந்தம், உற்பத்தியில் தொய்வு போன்ற பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் கார் உற்பத்தி நிறுவனங்கள், அந்தச் சுமையை  வாடிக்கையாளர்கள் மீது செலுத்த தயாராகி வருகின்றன.

முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி, தனது ஸ்விஃப்ட் மற்றும் சிஎன்ஜி வகை கார்களின் விலையை ரூ.15 ஆயிரம் அளவுக்கு உயர்த்தியுள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

ஸிவிஃப்ட், சிஎன்ஜி வகைகளுக்கு ஏற்ப, விலை உயர்வில் மாற்றமிருக்கும் என்றும் இந்திய மாருதி சுசூகியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்த விலை உயர்வானது ஜூலை 12ஆம் தேதியான இன்று முதலே அமலுக்கு வருகிறது.

முன்னதாக, ஸ்விஃப்ட் வகை கார்கள் ரூ.5.73 லட்சம் முதல் 8.27 லட்சம் வரை விற்கப்பட்டது. இது தில்லிக்கான விலை. இது நாட்டின் பிற மாநிலங்களுக்கு வேறுபடும். சிஎன்ஜி மாடல்கள் ரூ.4.43 லட்சம் முதல் ரூ.9.36 லட்சம் வரை விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலப்பொருள்களின் விலை உயர்வு காரணமாக, ஏற்கனவே சில மாடல் கார்களின் விலையை கடந்த ஏப்ரல் மாதம்தான் மாருதி சுசூகி உயர்த்தியிருந்தது நினைவிருக்கலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com