ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முதுநிலை மருத்துவப் படிப்பு: செப். 11-ல் நீட் தேர்வு

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 11-ம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். 

News image
Updated On :13 ஜூலை 2021, 1:11 pm

DIN

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 11-ம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். 

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமது சுட்டுரையில் அமைச்சர் மாண்டவியா பதிவிட்டுள்ளதாவது, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 11-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு எனது வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். 

செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ள இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று மாலை தொடங்கியது.

இளநிலை எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய நுழைவு மற்றும் தகுதித் தோ்வு (நீட் 2021) வரும் செப்டம்பா் மாதம் 12-ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் அறிவித்துள்ள நிலையில், அதற்கான ஆன்லைன் விண்ணப்பம் மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://ntaneet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.