வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஒரே நாளில் 37 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :14 ஜூலை 2021, 5:08 am

DIN

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் முதல் படிப்படியாக அனைத்துத் தரப்பினருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் கடந்த 24 மணி நேரத்தில் 37,14,441 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 38 கோடியே 76 லட்சத்து 97 ஆயிரத்து 935 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.