ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வாராணசியில் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

உத்தரப் பிரதேசம் வாரணசியில் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:26 am

DIN


உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் ரூ. 1,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைத்தார்.

பழமை வாய்ந்த நகரமான காசியின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டு மையத்தின் கட்டடத்தை அவர் திறந்து வைத்தார்.

சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டு மையத்தின் கூரை சிவ லிங்கத்தின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி 108 ருத்ராக்ஷம் நிறுவப்பட்டுள்ளதாகவும் அலுவலர்கள் கூறுகின்றனர். சிக்ரா பகுதியில் 2.87 ஹெக்டேர் நிலத்தில் 1,200 இருக்கை வசதிகளுடன் இரண்டு மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் மாநாடுகளை நடத்தி சமூக கலாசாரங்கள் குறித்த உரையாடலை நடத்துவதற்கு இந்த மையம் வாய்ப்பளிக்கும் என அலுவலர்கள் கூறுகின்றனர். நகரில் சுற்றுலா துறையை மேம்படுத்த இது உதவும் எனவும் அலுவலர்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.