நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் தேசத் துரோக சட்டம் தேவையா? - உச்ச நீதிமன்றம் கேள்வி

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் தேசத் துரோக சட்டம் தேவையா? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :15 ஜூலை 2021, 6:44 am

DIN


சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் தேசத் துரோக சட்டம் தேவையா? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஓய்வுபெற்ற ராணுவ வீரரான எஸ்.ஜி. வாம்பட்கேரே, தேசத் துரோக சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதை இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் தேசத் துரோக சட்டம் தேவையா? எனக் கேள்வி எழுப்பியது.

அதுமட்டுமின்றி, ஆங்கிலேயர்கள் காலச் சட்டமான தேசத் துரோக சட்டம் காலனி ஆதிக்க மனோபாவம் கொண்டது எனவும் நீதிபதிகள் சாடினர். அதன் தேவை குறித்து ஆராயப்படும் எனத் தெரிவித்த நீதிபதிகள் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

மேலும், இச்சட்டத்தை பயன்படுத்திதான் மகாத்மா காந்தியை அடக்க ஆங்கிலேயர்கள் முயற்சித்தனர் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தேசத் துரோக சட்டம் நீண்ட நாள்களாக பெரும் விமரிசனத்திற்குள்ளாகி வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.