எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

72 மணி நேரத்துக்குள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை: மகாராஷ்டிரம்

கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளையும் செலுத்தி 15 நாள்களுக்குப் பிறகு மகாராஷ்டிரம் வருவோர் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ளத் தேவையில்லை என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

News image
தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ஆர்டிபிசிஆர் சோதனை தேவையில்லை: மகாராஷ்டிரம்
Updated On :16 ஜூலை 2021, 7:53 am

DIN

மும்பை: கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளையும் செலுத்தி 15 நாள்களுக்குப் பிறகு மகாராஷ்டிரம் வருவோர் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ளத் தேவையில்லை என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த உத்தரவு வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாக மாநில முதன்மைச் செயலாளர் வெளியிட்டிருக்கும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் ஒருவர் செலுத்திக் கொண்டு, 15 நாள்களுக்குப் பிறகு மகாராஷ்டிரத்துக்கு வருவதாக இருந்தால், தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை கையில் கொண்டு வர வேண்டும். அவர்கள் மகாராஷ்டிரத்துக்குள் நுழையும் போது ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மற்றவர்கள் மாநிலத்துக்குள் நுழையும் போது 72 மணி நேரத்துக்குள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.