சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சத்தீஸ்கரில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

ஏழு பெரிய மாநிலங்களின் தினசரி கரோனா பாதிப்பை காட்டிலும் சத்தீஸ்கரில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகளவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :17 ஜூலை 2021, 7:20 am

DIN

ஏழு பெரிய மாநிலங்களின் தினசரி கரோனா பாதிப்பை காட்டிலும் சத்தீஸ்கரில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகளவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் நேற்று (வெள்ளிக்கிழமை) 312 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, உத்தரப் பிரதேசம் (77), ராஜஸ்தான் (35), மத்தியப் பிரதேசம் (15), குஜராத் (38), தில்லி (66), ஜார்க்கண்ட் (52), ஹரியாணா (46) ஆகிய மாநிலங்களின் தினசரி கரோனா பாதிப்பை காட்டிலும் அதிகளவில் சத்தீஸ்கரில் பதிவாகியுள்ளது.

கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்படுவோர் விகிதம் 1 சதவிகிதமாக இருந்தபோதிலும், தினசரி கரோனா பாதிப்பின் சராசரி 300ஆக பதிவாகியுள்ளது. 

இதுகுறித்து மாநிலத்தின் சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் சுபாஷ் மிஸ்ரா கூறுகையில், "மற்ற மாநிலங்களை காட்டிலும், சத்தீஸ்கரில் அதிகளவில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனையை மேலும் அதிகரித்து மாவட்ட அளவில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். எனவே, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.