விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சத்தீஸ்கரில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

ஏழு பெரிய மாநிலங்களின் தினசரி கரோனா பாதிப்பை காட்டிலும் சத்தீஸ்கரில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகளவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :17 ஜூலை 2021, 7:20 am

ஏழு பெரிய மாநிலங்களின் தினசரி கரோனா பாதிப்பை காட்டிலும் சத்தீஸ்கரில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகளவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் நேற்று (வெள்ளிக்கிழமை) 312 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, உத்தரப் பிரதேசம் (77), ராஜஸ்தான் (35), மத்தியப் பிரதேசம் (15), குஜராத் (38), தில்லி (66), ஜார்க்கண்ட் (52), ஹரியாணா (46) ஆகிய மாநிலங்களின் தினசரி கரோனா பாதிப்பை காட்டிலும் அதிகளவில் சத்தீஸ்கரில் பதிவாகியுள்ளது.

கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்படுவோர் விகிதம் 1 சதவிகிதமாக இருந்தபோதிலும், தினசரி கரோனா பாதிப்பின் சராசரி 300ஆக பதிவாகியுள்ளது. 

இதுகுறித்து மாநிலத்தின் சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் சுபாஷ் மிஸ்ரா கூறுகையில், "மற்ற மாநிலங்களை காட்டிலும், சத்தீஸ்கரில் அதிகளவில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனையை மேலும் அதிகரித்து மாவட்ட அளவில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். எனவே, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.