தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மும்பையில் சுவர் இடிந்து விழுந்து 11 பேர் பலி

மும்பை செம்பூரிலுள்ள பாரத் நகர் பகுதியில் நிலச்சரிவால் குடிசை வீடுகள் மீது சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகியுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :18 ஜூலை 2021, 7:50 am

DIN


மும்பை செம்பூரிலுள்ள பாரத் நகர் பகுதியில் நிலச்சரிவால் குடிசை வீடுகள் மீது சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகியுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது. சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறையினர் 16 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பையில் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டு சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என முதற்கட்டமாக கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.