மும்பையில் சுவர் இடிந்து விழுந்து 11 பேர் பலி
மும்பை செம்பூரிலுள்ள பாரத் நகர் பகுதியில் நிலச்சரிவால் குடிசை வீடுகள் மீது சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகியுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.


மும்பை செம்பூரிலுள்ள பாரத் நகர் பகுதியில் நிலச்சரிவால் குடிசை வீடுகள் மீது சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகியுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது. சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறையினர் 16 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பையில் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டு சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என முதற்கட்டமாக கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...