மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வடகிழக்கு மாநிலங்களில் பரவும் டெல்டா வகை கரோனா: கட்டுப்பாடுகள் விதிப்பு

வட கிழக்கு மாநிலங்களில் டெல்டா வகை கரோனா பரவிவரும் நிலையில் அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :18 ஜூலை 2021, 8:32 am


வட கிழக்கு மாநிலங்களில் டெல்டா வகை கரோனா பரவிவரும் நிலையில் அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் டெல்டா வகை கரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, வட கிழக்கு மாநிலங்களில் கரோனா தாக்கம் குறைந்திருந்தாலும் டெல்டா வகையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மணிப்பூரில் அடுத்த பத்து நாட்களுக்கும் மிசோரமில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் 24ஆம் தேதி வரையும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளன. திரிபுராவில் சனி மற்றும் ஞாயிறுகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தலைநகர் அகர்தாலா மற்றும் 11 நகராட்சி அமைப்புகளின் கீழ் வரும் பகுதிகளில் ஜூலை 19 முதல் 23 வரை காலை நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்படவுள்ளது.

சிக்கிமில் கரோனா முதல் அலையைக் காட்டிலும் இரண்டாவது அலையின்போது 155 சதவிகிதம் கூடுதலாகப் பரவியது. எனவே, அடுத்த 30 நாட்களுக்கு மதம் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அசாமில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட தளர்வுகளை அம்மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.