ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பஞ்சாப் உள்கட்சி பூசல்: முன்னாள் காங். தலைவர் கருத்து

பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் மீது வைத்துள்ள நம்பிக்கையை காக்க வேண்டியது நமது கடமை என்று காங். முன்னாள் தலைவர் சுஜில் ஜாகர் தெரிவித்துள்ளார். 

News image
சுஜில் ஜாகர் (கோப்புப் படம்)
Updated On :19 ஜூலை 2021, 10:55 am

DIN

பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் மீது வைத்துள்ள நம்பிக்கையை காக்க வேண்டியது நமது கடமை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுஜில் ஜாகர் தெரிவித்துள்ளார். 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டதையடுத்து, அமைச்சர் திரிபத் ராஜேந்திர சிங் பாஜ்வாவை நவ்ஜோத் சிங் சித்து நேரில் சென்று சந்தித்தார்.

அவருடன் சென்ற முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் சுஜில் ஜாகர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது, ''திரிபத் ராஜேந்திர சிங் உடன் ஆலோசனை நடத்தவில்லை. பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் நியமிக்கப்பட்டதை வரவேற்கும் விதமாக தேநீர் விருந்து அளிப்பதற்கே திரிபத் அழைப்பு விடுத்திருந்தார். 

பஞ்சாப் காங்கிரஸ் ஒற்றுமையாகவே உள்ளது. பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். மிகப்பெரிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. அவர்களது நம்பிக்கையை மேலும் பலப்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.