சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பெகாசஸ் விவகாரத்தில் பிரதமர் உண்மையை பேச வேண்டும்: சஞ்சய் ரெளத்

பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் உண்மை நிலையை பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விளக்க வேண்டும் என்று சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரெளத் வலியுறுத்தினார்.

News image
சஞ்சய் ரெளத் (கோப்புப் படம்)
Updated On :28 ஜனவரி 2024, 3:43 am

DIN

பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் உண்மை நிலையை பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விளக்க வேண்டும் என்று சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரெளத் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று கரோனா கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி குறித்து விவாதிக்கப்பட்டது. 

அப்போது பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்து சிவசேனை மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரெளத் பேசியதாவது, 

அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரது செல்லிடப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நாட்டின் முக்கிய நபர்களின் செல்லிடப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதன் பின்புலத்தில் மிகப்பெரிய காரணம் உள்ளது.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விளக்கம் அளிக்க வேண்டும்.

வெளிநாட்டை சேர்ந்த உளவு நிறுவனம் மூலம் இந்திய முக்கியப் பிரமுகர்களின் செல்லிடப்பேசிகள் உளவுபார்க்கப்படுவது நாட்டின் சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவால் என்றும் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.