சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்த முடியாதது வருத்தமே: மத்திய இணையமைச்சர் அஜய் பட்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்த முடியாதது வருத்தமளிப்பதாக மத்திய இணையமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:43 am

DIN

நாடாளுமன்ற மாநிலங்களவையில் புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்த முடியாதது வருத்தமளிப்பதாக மத்திய இணையமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று(திங்கள்) தொடங்கி வருகிற ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ளது. 

கூட்டத்தொடரின் முதல் நாளே, பெகாசஸ் விவகாரம், கரோனா பெருந்தொற்று, எரிபொருள் விலை உயர்வு, வேளாண் சட்டங்கள் போன்ற பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளி காணப்பட்டது. 

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்த முடியாதது வருத்தமளிப்பதாக மத்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், 'நேற்று நடந்தது வருத்தமாக இருந்தது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சியின் முரட்டுத்தனத்தால் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களை அறிமுகப்படுத்த முடியவில்லை. கூட்டத்தொடர் செயல்பட இயங்க எம்.பி.க்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். 

நீங்கள் எதை பேச விரும்பினாலும் அவையில் பேசலாம். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார். அதுபோல பெகாசஸ் பிரச்னை குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதில் அளித்துவிட்டார். 

இந்த அறிக்கைகள் அனைத்தும் ஆதாரமற்றவை, அவற்றுக்கு எந்த அடிப்படையும் இல்லை. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவது நல்லதல்ல என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.