மேற்கு வங்க வன்முறை: தில்லியில் பாஜக எம்.பி.க்கள் போராட்டம்

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையை கண்டித்து தில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தில்லியில் பாஜக எம்.பி.க்கள் போராட்டம்
தில்லியில் பாஜக எம்.பி.க்கள் போராட்டம்
Updated on
1 min read

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையை கண்டித்து தில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் முடிவு வெளியான பிறகு மே 2 மற்றும் 3ஆம் தேதிகளில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரால், பாஜக தொண்டர்கள் கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், தில்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவு மண்டபத்திற்கு வெளியே மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் தலைமையில் பாஜகவின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து திலிப் கோஷ் கூறியதாவது,

திரிணமூல் காங்கிரஸின் வன்முறையால் உயிரிழந்த 175 பாஜக தொண்டர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com