நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேற்கு வங்க வன்முறை: தில்லியில் பாஜக எம்.பி.க்கள் போராட்டம்

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையை கண்டித்து தில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News image

தில்லியில் பாஜக எம்.பி.க்கள் போராட்டம்

Updated On :21 ஜூலை 2021, 8:10 am

ANI

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையை கண்டித்து தில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் முடிவு வெளியான பிறகு மே 2 மற்றும் 3ஆம் தேதிகளில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரால், பாஜக தொண்டர்கள் கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், தில்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவு மண்டபத்திற்கு வெளியே மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் தலைமையில் பாஜகவின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து திலிப் கோஷ் கூறியதாவது,

திரிணமூல் காங்கிரஸின் வன்முறையால் உயிரிழந்த 175 பாஜக தொண்டர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.