ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

டிவிட்டர் நிர்வாகிக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு: கர்நாடக உயர்நீதிமன்றம்

சமூக நல்லிணக்கத்தை குழைக்கும் விதமாக பொய்யான விடியோ பதிவிடப்பட்டதாக எழுந்த புகாரில், டிவிட்டர் இந்திய நிர்வாகி நேரில் ஆஜராவதிலிருந்து கர்நாடக உயர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :23 ஜூலை 2021, 12:26 pm

DIN

சமூக நல்லிணக்கத்தை குழைக்கும் விதமாக பொய்யான விடியோ பதிவிடப்பட்டதாக எழுந்த புகாரில், டிவிட்டர் இந்திய நிர்வாகி நேரில் ஆஜராவதிலிருந்து கர்நாடக உயர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டம், லோனி நகரில் அப்துல் சமத் எனும் இஸ்லாமிய முதியவரை காவி உடை அணிந்து வந்த ஐந்து பேர் சரமாரியாகத் தாக்கினர். 'ஜெய் ஸ்ரீராம்' 'வந்தே மாதரம்' என முழக்கமிடாததால்தான் அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பதிவிடப்பட்ட விடியோ பொய்யானவை என்றும் சமூக நல்லிணக்கத்தை குழைக்கும் விதமாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதாகவும் கூறி, டிவிட்டர் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் மணிஷ் மகேஷ்வரி, விடியோவை பகிர்ந்த பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு உத்தரப் பிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியது. 

இதனிடையே,இந்த வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மணிஷ் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரித்த நீதிபதி ஜி. நரேந்தர், மணிஷ்க்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்தார்.

இதுகுறித்து நீதிபதி கூறுகையில், "தான் குற்றம்சாட்டப்பட்டவர் இல்லை என்றும் தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் சட்ட விரோதமானது என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார். அவரின் வாதம் சரியானதே. அவரின் வாக்குமூலத்தை பெற வேண்டும் என்றால் விடியோ கான்பரன்சிங் மூலம் பெற்று கொள்ளலாம்" என உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.