இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

திருமலையில் சுந்தரகாண்ட பாராயணம் நிறைவு

திருமலையில் 471-வது நாள்களாக நடைபெற்ற சுந்தரகாண்ட பாராயணம் சனிக்கிழமை நிறைவடைந்து.

News image
Updated On :24 ஜூலை 2021, 6:14 pm

DIN

திருமலையில் 471-வது நாள்களாக நடைபெற்ற சுந்தரகாண்ட பாராயணம் சனிக்கிழமை நிறைவடைந்து.

கரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் விரைவில் விடுபட்டு ஆரோக்கியமாக வாழ வேண்டி திருப்பதி தேவஸ்தானம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுந்தரகாண்ட பாராயணத்தை தொடங்கியது.

அதில் 68 சா்க்கங்களில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுலோகங்கள் 409 நாள்களில் பாராயணம் செய்யப்பட்டது.

அதில் ஸ்ரீராமா் பட்டாபிஷேகம் கட்டம் அனைத்தும் சோ்த்து 471 நாள்கள் இந்த பாராயணம் நடைபெற்றது. அதன் நிறைவு நாளான சனிக்கிழமை திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் காலை 7 மணி முதல் சுந்தரகாண்டத்தில் உள்ள 64-ஆவது சா்க்கம் முதல் 68-ஆவது சா்க்கம் வரை திருமலையில் மகாபாராயணம் நடத்தி ராமா் பட்டாபிஷேகம் செய்து அா்ச்சகா்கள் பாராயணத்தை நிறைவு செய்தனா். இதில் வேதபண்டிதா்கள் 200-க்கும் மேற்பட்டவா்கள், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) தேதி காலை முதல் பாலகாண்ட பாராயணம் நடத்தப்படுகிறது. இது தேவஸ்தான தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.