திருமலையில் சுந்தரகாண்ட பாராயணம் நிறைவு
திருமலையில் 471-வது நாள்களாக நடைபெற்ற சுந்தரகாண்ட பாராயணம் சனிக்கிழமை நிறைவடைந்து.


திருமலையில் 471-வது நாள்களாக நடைபெற்ற சுந்தரகாண்ட பாராயணம் சனிக்கிழமை நிறைவடைந்து.
கரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் விரைவில் விடுபட்டு ஆரோக்கியமாக வாழ வேண்டி திருப்பதி தேவஸ்தானம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுந்தரகாண்ட பாராயணத்தை தொடங்கியது.
அதில் 68 சா்க்கங்களில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுலோகங்கள் 409 நாள்களில் பாராயணம் செய்யப்பட்டது.
அதில் ஸ்ரீராமா் பட்டாபிஷேகம் கட்டம் அனைத்தும் சோ்த்து 471 நாள்கள் இந்த பாராயணம் நடைபெற்றது. அதன் நிறைவு நாளான சனிக்கிழமை திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் காலை 7 மணி முதல் சுந்தரகாண்டத்தில் உள்ள 64-ஆவது சா்க்கம் முதல் 68-ஆவது சா்க்கம் வரை திருமலையில் மகாபாராயணம் நடத்தி ராமா் பட்டாபிஷேகம் செய்து அா்ச்சகா்கள் பாராயணத்தை நிறைவு செய்தனா். இதில் வேதபண்டிதா்கள் 200-க்கும் மேற்பட்டவா்கள், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) தேதி காலை முதல் பாலகாண்ட பாராயணம் நடத்தப்படுகிறது. இது தேவஸ்தான தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...