கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பெகாஸஸ் விவகாரத்தை ஹிரோஷிமாவுடன் ஒப்பிட்ட சிவசேனா

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசியதை பெகாஸஸ் விவகாரத்துடன் ஒப்பிட்டு சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா கட்டுரை வெளியிட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :25 ஜூலை 2021, 10:13 am

DIN

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசியதை பெகாஸஸ் விவகாரத்துடன் ஒப்பிட்டு சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா கட்டுரை வெளியிட்டுள்ளது.

பெகாஸஸ் மென்பொருள் மூலம் வேவு பார்ப்பதற்கான இலக்கில் எதிர்க்கட்சி தலைவர்கள் இருந்ததாக வெளியான செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துவருகிறது.

இந்த விவகாரத்தை முன்வைத்து எதிரக்கட்சிகள் நாடாளுமன்ற மழைக் காலக் கூட்ட தொடரில் அமளியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், பெகாஸஸ் மென்பொருள் மூலம் வேவு பார்த்தது ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசியதைபோல் உள்ளது என சிவசேனா விமரிசித்துள்ளது.

இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா வெளியிட்ட கட்டுரையில், "நவீன கால தொழில்நுட்பம் நம்மை அடிமைத்தன காலத்திற்கு இட்டு சென்றுள்ளது. ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசியதற்கும் பெகாஸஸ் விவகாரத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை. 

ஹிரோஷிமாவில் மக்கள் பலியாகினர். பெகாஸஸ் சுதந்திரத்தை மரணிக்க வைத்துள்ளது. நாமும் வேவு பார்க்கப்பட்டிருப்போமா என அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். நீதித்துறையும் ஊடகமும் இதேமாதிரியான நெருக்கடியை சந்தித்துள்ளது. தேசிய தலைநகரில் சுதந்திரமான சூழல் சில ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.