ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

‘வேளாண் சட்டங்கள் மூலம் மூன்று தொழிலதிபர்கள் மட்டுமே பயனடைவார்கள்’: ராகுல்

வேளாண் சட்டங்கள் மூலம் இரண்டு அல்லது மூன்று தொழிலதிபர்கள் மட்டுமே பயனடைவார்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

Updated On :26 ஜூலை 2021, 7:09 am

ANI

வேளாண் சட்டங்கள் மூலம் இரண்டு அல்லது மூன்று தொழிலதிபர்கள் மட்டுமே பயனடைவார்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடாளுமன்றத்திற்கு டிராக்டரை ஓட்டி வந்து ராகுல் காந்தி போராட்டம் நடத்தினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ராகுல் பேசியது, 

விவசாயிகளின் கருத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்துள்ளேன். மத்திய அரசு விவசாயிகளின் குரலை ஒடுக்குகிறது, வேளான் சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் எந்தவொரு விவாதங்களும் நடைபெறவில்லை. மூன்று கருப்பு சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். இந்த சட்டங்கள் மூலம் இரண்டு அல்லது மூன்று தொழிலதிபர்கள் மட்டுமே பயனடைவார்கள் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.

மத்திய அரசை பொறுத்தவரை விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், போராடுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள். ஆனால் விவசாயிகளின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது என்றார். 

ராகுல் காந்தியுடன், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் டிராக்டரில் அமர்ந்து வேளாண் சட்டங்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் வந்தனர்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக பஞ்சப், ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.