ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உ.பி. தேர்தல்: கட்சிக்குள் கருத்துக் கணிப்பு நடத்திய பாஜக

​உத்தரப் பிரதேசத்தில் செயல்படாத பாஜக எம்எல்ஏ-க்களுக்கு பேரவைத் தேர்தலில் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜூலை 2021, 2:47 pm

DIN


உத்தரப் பிரதேசத்தில் செயல்படாத பாஜக எம்எல்ஏ-க்களுக்கு பேரவைத் தேர்தலில் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி தகவலறிந்த கட்சி வட்டாரங்கள் கூறியது:

"உத்தரப் பிரதேசத்தில் கட்சிக்குள்ளேயே பஞ்சாயத்து தேர்தலுக்கு முன்பும், பின்பும் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் முடிவில் 12 எம்எல்ஏ-க்கள் செயல்படாத எம்எல்ஏ-க்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் அனைவருக்கும் 2022 பேரவைத் தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது. அவர்களுக்குப் பதில் புதிய முகங்கள் குறிப்பாக இளம் தலைவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

தற்போதைய எம்எல்ஏ-க்களில் 25-30 சதவிகிதத்தினருக்கு வரவிருக்கும் பேரவைத் தேர்தல்களில் வாய்ப்புகள் வழங்கப்படாது. அவர்கள் புதிய முகங்கள் மூலம் மாற்றப்படலாம்."

உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.