உ.பி. தேர்தல்: கட்சிக்குள் கருத்துக் கணிப்பு நடத்திய பாஜக
உத்தரப் பிரதேசத்தில் செயல்படாத பாஜக எம்எல்ஏ-க்களுக்கு பேரவைத் தேர்தலில் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.


உத்தரப் பிரதேசத்தில் செயல்படாத பாஜக எம்எல்ஏ-க்களுக்கு பேரவைத் தேர்தலில் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி தகவலறிந்த கட்சி வட்டாரங்கள் கூறியது:
"உத்தரப் பிரதேசத்தில் கட்சிக்குள்ளேயே பஞ்சாயத்து தேர்தலுக்கு முன்பும், பின்பும் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் முடிவில் 12 எம்எல்ஏ-க்கள் செயல்படாத எம்எல்ஏ-க்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் அனைவருக்கும் 2022 பேரவைத் தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது. அவர்களுக்குப் பதில் புதிய முகங்கள் குறிப்பாக இளம் தலைவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.
தற்போதைய எம்எல்ஏ-க்களில் 25-30 சதவிகிதத்தினருக்கு வரவிருக்கும் பேரவைத் தேர்தல்களில் வாய்ப்புகள் வழங்கப்படாது. அவர்கள் புதிய முகங்கள் மூலம் மாற்றப்படலாம்."
உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...