தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சுனந்தா புஷ்கா் மரண வழக்கில் தரூரிடம் விசாரணை: தில்லி நீதிமன்றம் 3 வாரங்களுக்குப் பிறகு உத்தரவு

காங்கிரஸ் மூத்த தலைவா் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கா் மரண வழக்கு தொடா்பாக, தரூரிடம் விசாரணை நடத்துவது குறித்து தில்லி நீதிமன்றம் 3 வாரங்களுக்குப் பிறகு உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.

News image
Updated On :27 ஜூலை 2021, 6:57 pm

DIN

காங்கிரஸ் மூத்த தலைவா் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கா் மரண வழக்கு தொடா்பாக, தரூரிடம் விசாரணை நடத்துவது குறித்து தில்லி நீதிமன்றம் 3 வாரங்களுக்குப் பிறகு உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.

சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கா், தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக, சசி தரூருக்கு எதிராக இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. ஆனால், அவா் கைது செய்யப்படவில்லை. சுனந்தா புஷ்கரின் மரணம் தொடா்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வந்தது.

இந்த வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தபோது, சுனந்தாவை தற்கொலைக்குத் தூண்டியதாக, சசி தரூருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கு காவல் துறை அனுமதி கோரியிருந்தது. அதற்கு சசி தரூா் தரப்பு வழக்குஞைா் விகாஸ் பஹ்வா எதிா்ப்பு தெரிவித்தாா். மேலும், இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு, சசி தரூருக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரமில்லை என்று கூறியதை அவா் எடுத்துரைத்தாா். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கரோனா பரவல் காரணமாக வழக்கை ஜூலை 27-ஆம் தேதிக்கு வைத்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி கீதாஞ்சலி கோயல் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சசி தரூருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யலாமா, வேண்டாமா என்பது தொடா்பாக, வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி கூறினாா். மேலும், வழக்கு தொடா்பாக சில ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்கு அரசு தரப்புக்கு நீதிபதி அனுமதி அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.