ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உத்தரப் பிரதேசம்  பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கு 2 லட்சம் இழப்பீடு - பிரதமர் மோடி 

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியா தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தின் மீது லாரி மோதிய  பயங்கரமான விபத்தில்  சம்பவ இடத்திலேயே 18 பேர் உயிரிழந்தனர்

News image
உத்தரப் பிரதேசம்  பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கு 2 லட்சம் இழப்பீடு - பிரதமர் மோடி 
Updated On :28 ஜூலை 2021, 9:58 am

DIN

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியா தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தின் மீது லாரி மோதிய  பயங்கரமான விபத்தில்  சம்பவ இடத்திலேயே 18 பேர் உயிரிழந்தனர் . 25 பேர் படுகாயங்களுடன் லக்னோ அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் இழப்பீடும் , காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.

மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் தகவல்களைக் கேட்டறிந்த மோடி விபத்து குறித்து விரைவான விசாரணையைத்  தொடங்க கேட்டுக்கொண்டார்.

மேலும் விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படும் என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

பிரதமரும் , மாநில முதல்வரும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தங்களுடைய இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்டனர் .
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.