தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காஷ்மீர் : கனமழையால்  6 பேர் பலி , 40 பேர் மாயம் 

காஷ்மீர் மாநிலத்தின்  கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹான்சன் கிராமத்தில்  ஏற்பட்ட கனமழையின் காரணமாக  வெள்ளப்பெருக்கு உருவானது. இதில் சிக்கி 6 பேர் வரை உயிரிழந்தனர். 

News image
காஷ்மீர் : கனமழையால்  6 பேர் பலி , 40 பேர் மாயம் 
Updated On :28 ஜூலை 2021, 5:44 am

DIN

காஷ்மீர் மாநிலத்தின்  கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹான்சன் கிராமத்தில்  ஏற்பட்ட கனமழையின் காரணமாக  வெள்ளப்பெருக்கு உருவானது. இதில் சிக்கி 6 பேர் வரை உயிரிழந்தனர். 

இதுகுறித்து அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஷபாத் உசைன் அளித்த தகவலில் " திடீர் கனமழையால் உருவான வெள்ளப்பெருக்கில் சிக்கி   ஹான்சன் கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் பலியானார்கள் , இறந்தவர்களின் உடல்கள் மீட்டப்பட்டது.  படுகாயங்கள் அடைந்த 5 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறோம் . மேலும் மாயமான 40 பேரை தேடும் பணியில் உள்ளூர் காவல்துறையும்  , தேசிய பேரிடர்  மீட்புப் படையும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள் என்றும் 25 கி.மீ வரை தேடுதல் பணியை மேற்கொண்டிருக்கிறோம் " எனத்  தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.