நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுதந்திர தின உரை: கருத்து கேட்கும் பிரதமர்

சுதந்திர தினத்தில் நடைபெறும் விழாவில் பிரதமரின் உரையில் சேர்க்க வேண்டிய மக்களின் கருத்துகளை பிரதமர் அலுவலகம் கேட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :30 ஜூலை 2021, 7:31 am

DIN

சுதந்திர தினத்தில் நடைபெறும் விழாவில் பிரதமரின் உரையில் சேர்க்க வேண்டிய மக்களின் கருத்துகளை பிரதமர் அலுவலகம் கேட்டுள்ளது.

தில்லியில் உள்ள செங்கோட்டையில், நாட்டின் 75ஆவது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றி வைத்து உரையாற்றவுள்ளார்.

பிரதமரின் உரையில் சேர்க்க வேண்டிய மக்களின் கருத்துகளை தெரிவிக்க பிரதமர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டிவிட்டரில், சுதந்திர தினவிழாவில் உங்கள் கருத்து செங்கோட்டையில் ஒலிக்க வேண்டுமானால், பிரதமரின் உரையில் சேர்ப்பதற்கு @myindia என்ற டிவிட்டர் பக்கத்தை டேக் செய்து கருத்துகளை பதிவிடலாம் என தெரிவித்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.