47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பெகாஸஸ் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை

பெகாஸஸ் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.

News image
உச்ச நீதிமன்றம்
Updated On :30 ஜூலை 2021, 7:09 am

DIN

பெகாஸஸ் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், உயர்மட்ட அரசு அலுலவர்கள் உள்ளிட்டோர் பெகாஸஸ் மென்பொருள் மூலம் வேவு பார்ப்பதற்கான பட்டியலில் இருந்ததாக தி வயர் நிறுவனம் செய்தி வெளியிட்டது.

இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தக் கோரி மூத்த பத்திரிகையாளர்கள் என். ராம், சசி குமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார்.

என். ராம், சசி குமார் ஆகியோருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "தனி மனிதச் சுதந்திரத்தில் இந்த விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் . பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள் ஆகியோர் வேவு பார்ப்பதற்கான பட்டியலில் இருந்துள்ளனர்" என வாதம் முன் வைத்தார்.

இதற்கு பதில் அளித்த நீதிபதி, "பணிச்சுமையை பொறுத்து இந்த விவகாரம் அடுத்த வாரத்திற்கு எடுத்து கொள்ள வேண்டும்" என்றார். 

பெகாஸஸ் மென்பொருளுக்கான உரிமம் வாங்கப்பட்டு நேரடியாகவே அல்லது மறைமுகமாகவோ வேவு பார்க்கப்பட்டதா என்பதை  தெளிவுப்படுத்த உச்ச நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.