மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

எல்லைப்பகுதியில் இருந்து காவலர்களைத் திரும்பப் பெற அசாம், நாகாலாந்து முடிவு

எல்லைப் பிரச்னை நிலவும் பதற்றமான பகுதிகளில் இருந்து காவலர்களைத் திரும்பப் பெற அசாம் மற்றும் நாகாலாந்து மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.

News image

கோப்புப்படம்

Updated On :31 ஜூலை 2021, 2:00 pm

எல்லைப் பிரச்னை நிலவும் பதற்றமான பகுதிகளில் இருந்து காவலர்களைத் திரும்பப் பெற அசாம் மற்றும் நாகாலாந்து மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.

கடந்த 27ஆம் தேதி அசாம் மற்றும் மிசோரம் மாநில எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட மோதலில் காவலர்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். இருமாநில காவலர்கள் மோதிக் கொண்ட இந்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் அசாம் மற்றும் நாகாலாந்து மாநிலங்கள் தங்களது மாநில எல்லைகளில் உள்ள காவலர்களைத் திரும்பப் பெற முடிவெடுத்துள்ளது.
நாகாலாந்து மாநிலத்தின் திமாபூரில் நடைபெற்ற இருமாநில தலைமை செயலர்கள் இடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இரு மாநிலங்களுக்கிடையே எல்லைப் பிரச்னைகள் நிலவி வரும் நிலையில் இது சம்பந்தமாக, இரு மாநிலங்களின் காவலர்களை தங்களின் தற்போதைய எல்லைப்பகுதிகளில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரு மாநில அரசுகளின் இந்த முடிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். மேலும் எல்லைப்பகுதிகளில் அமைதி நிலவுவதை உறுதி செய்ய அசாம் அரசு எப்போதும் உறுதியாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அசாம் அரசு நாகாலாந்து மாநில அரசுடன் 512 கிமீ தூரம் எல்லையைப் பகிர்ந்து கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.