கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பஞ்சாப் : இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் மாவட்டம் வழியாக பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றவர்களின்   எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்

News image
பஞ்சாப் : இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொலை
Updated On :31 ஜூலை 2021, 7:11 am

DIN

பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் மாவட்டம் வழியாக பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றவர்களின்   எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில்  இருவர் உயிரிழந்தனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை ) இரவு எல்லைக் கண்காணிப்பில் இருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் திடீரென இருவர் எல்லையத் தாண்டி  வந்துகொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். 

 அவர்களை துரத்திச் சென்று பலமுறை எச்சரித்தும் கேட்காமல் மேலும் முன்னேறிக் கொண்டிருந்தவர்களின் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே ஊடுருவிய இருவரும் பலியானார்கள்.

மேலும் அவர்கள் யார் என்கிற விசாரணையை மேற்கொண்டிருப்பதாகவும் , அப்பகுதியை தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.