ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் இல்லை: உஜ்ஜைன் நகராட்சி முடிவு

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களின் பலர் இதுவரை முதல் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை.

News image

தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் இல்லை: உஜ்ஜைன் நகராட்சி முடிவு

Updated On :1 ஜூன் 2021, 6:23 am


போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களின் பலர் இதுவரை முதல் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை.

உஜ்ஜைன் நகராட்சியைச் சேர்ந்த 30 சதவீத ஊழியர்கள் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வராததல், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே ஊதியம் என்ற விதிமுறையை உருவாக்க நகராட்சி முடிவு செய்துள்ளது.

கரோனா தடுப்பூசி என்பது, தொற்றுப் பரவலுக்கு எதிரான ஒரு ஆயுதம். அதனை மக்கள் தாமாக முன் வந்து செலுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, கட்டாயமல்ல என்ற விதிமுறைக்கு எதிராக உஜ்ஜைன் நகராட்சியின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.

இது குறித்து உஜ்ஜைன் நகராட்சி ஆணையர் கூறுகையில், நகராட்சி ஊழியர்கள் பலரும் பொதுமக்களுடன் நேரிடையாக தொடர்பில் உள்ளவர்கள். இவர்களுக்கு கரோனா தடுப்பூசி மிக அவசியமாகிறது. எனவேதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.