மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

'பிரதமரின் அவலம்' - ராகுல் சுட்டுரை

நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜிடிபி வீழ்ச்சி அடைந்துள்ளது எனவும் இதனால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது எனவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

News image
ராகுல் காந்தி
Updated On :1 ஜூன் 2021, 9:30 am

DIN

நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜிடிபி வீழ்ச்சி அடைந்துள்ளதையும் இதனால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதையும் குறிப்பிட்டு 'பிரதமரின் அவலம்' என்று  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

2020-21 நிதியாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) -7.3 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது மிகவும் மோசமான வீழ்ச்சி என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மத்திய அரசின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் ராகுல் காந்தி, ஜிடிபி வீழ்ச்சி குறித்தும் பிரதமரை சாடியுள்ளார். 

நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜிடிபி வீழ்ச்சி அடைந்துள்ளது, இதனால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என்று கூறிய அவர், இது பிரதமரின் அவலம் என்று தனது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். 

இந்தப் பதிவுடன் வேலைவாய்ப்பின்மை எவ்வளவு அதிகரித்துள்ளது என்ற வரைபடம் ஒன்றையும் இணைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.