திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தில்லி: மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்தது

புது தில்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்குப் பின், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

News image
தில்லி: மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்தது
Updated On :2 ஜூன் 2021, 7:37 am

DIN


புது தில்லி: புது தில்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்குப் பின், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

மருத்துவமனைகள் தரப்பில் அளிக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி, கடந்த திங்கள்கிழமை, தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் 200-க்கும் குறைவான கரோனா நோயாளிகள்தான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மே 14-ஆம் தேதி முதலே, மருத்துவமனைகளில் நாள்தோறும் கரோனா பாதித்து அனுமதிக்கப்படும் நோயாளிகளை விடவும், கரோனாவிலிருந்து மீண்டு மருத்துவமனையிலிருந்து வெளியேறும் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

நாள்தோறும் புதிதாக கரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்தது போல, கரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.

கடந்த சனி மற்றும் ஞாயிறுகளில் முறையே 228 மற்றும் 237 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதே நாள்களில் முறையே 619 மற்றும் 425 பேர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.

மே 16-ஆம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து தற்போது அது 200க்கும் குறைவாக மாறியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.