மும்பை: உங்கள் கிராமத்தை கரோனா இல்லாத கிராமமாக மாற்றிக் காட்டினால், ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில் கரோனா தொற்றை ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பைப் பெறும் வகையில் மாநில அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கரோனாவை ஒழிக்கும் வகையில், கரோனா இல்லாத கிராமம் என்ற போட்டியை முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளதாக ஊரக மேம்பாட்டு அமைச்சர் ஹசன் முஷ்ரிப் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருவாய் மண்டலத்துக்கு உள்பட்ட மூன்று கிராம பஞ்சாயத்துகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும், அந்த வகையில் முதல் பரிசாக ரூ.50 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.25 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டித்தில் மொத்தம் 6 வருவாய் மண்டலங்கள் உள்ளன. அப்படியானால் 18 பரிசுகள் வழங்கப்படும். அதற்கு ரூ.5.4 கோடி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நியூசிலாந்து அமைச்சருடன் தாஜ்மஹாலை பார்வையிட்ட பியூஷ் கோயல்!

கயாது லோஹர் புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


