தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி எய்ம்ஸில் குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனை ஓரிரு தினங்களில் தொடக்கம்

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி பரிசோதனை ஓரிரு தினங்களில் தொடங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :3 ஜூன் 2021, 12:09 pm

DIN

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி பரிசோதனை ஓரிரு தினங்களில் தொடங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மூன்றாம் அலைக்கும் வாய்ப்புள்ளது என்று  கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி பரிசோதனைகள் தொடங்கும் நிலையில் உள்ளன. பாட்னாவின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்)  குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி பரிசோதனையை இன்று தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 12-18 வயதினருக்கு சோதனைகளைத் தொடங்கியுள்ளது. இந்த சோதனைக்குப் பின்னர் 6-12, 2-6 வயதினருக்கு சோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி பரிசோதனை ஓரிரு தினங்களில் தொடங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்தி குழந்தைகளிடம் பரிசோதனை ஒரு சில தினங்களில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, 

முன்னதாக பாரத் பயோடெக்கின் கரோனா தடுப்பூசியான கோவக்சினை குழந்தைகளுக்கு பரிசோதிக்க கடந்த மே 11 ஆம் தேதி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.