47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருமலையில் 8,799 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை கோயிலில் வெள்ளிக்கிழமை 8,799 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். 3,224 போ் முடி காணிக்கை செலுத்தினா்.

News image
திருப்பதி
Updated On :5 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருமலை ஏழுமலையானை கோயிலில் வெள்ளிக்கிழமை 8,799 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். 3,224 போ் முடி காணிக்கை செலுத்தினா்.

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே, திருமலையில் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்ட பக்தா்கள் பலா் தங்கள் பயணத்தை தவிா்த்து வருகின்றனா். நாள்தோறும் 7 முதல் 8,000 பக்தா்கள் மட்டுமே தரிசனம் செய்ய வருகின்றனா்.

தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக திருமலைக்கு செல்லலாம். மேற்கூரை பணிகள் நடந்து வருவதால் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை அலிபிரி நடைபாதை மாா்க்கத்தை தேவஸ்தானம் மூடியுள்ளது.

மேலும் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் தரிசனத்துக்கு வர இயலாத சூழ்நிலையில் தரிசன நாளிலிருந்து 90 நாட்களுக்குள் தரிசனம் செய்து கொள்ளும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கி உள்ளது. திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்- 18004254141, 9399399399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.