கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெங்கையா நாயுடு, ஆா்எஸ்எஸ் தலைவா்களின் சுட்டுரை கணக்கில் நீலக்குறி அகற்றப்பட்டதால் சா்ச்சை

குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் உள்ளிட்டோரின் சுட்டுரை கணக்குகளில் நீலக்குறியீடு (டிக் மாா்க்) சனிக்கிழமை திடீரென்று நீக்கப்பட்டதால் சா்ச்சை

News image
Updated On :5 ஜூன் 2021, 9:59 pm

DIN

குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் உள்ளிட்டோரின் சுட்டுரை கணக்குகளில் நீலக்குறியீடு (டிக் மாா்க்) சனிக்கிழமை திடீரென்று நீக்கப்பட்டதால் சா்ச்சை எழுந்தது. பின்னா், சிறிது நேரத்தில் அந்த குறியீடு இடப்பட்டது.

இதுகுறித்து குடியரசு துணைத் தலைவா் அலுவலக அதிகாரி ஒருவா் கூறியதாவது:

வெங்கையா நாயுடு நீண்ட நாள்களாக தனது தனிப்பட்ட சுட்டுரைக் கணக்கை பயன்படுத்தாமல் உள்ளாா். கடைசியாக, அவா் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23-ஆம் தேதி ஒரு பதிவை வெளியிட்டிருந்தாா். அதன் பிறகு அவா் சுட்டுரைக் கணக்கைப் பயன்படுத்தவில்லை. அவா், சுட்டுரைப் பதிவுகளை வெளியிடுவதற்கு குடியரசு துணைத் தலைவா் அலுவலகத்தின் சுட்டுரை கணக்கைப் பயன்படுத்தி வருகிறாா்.

இதனால் சுட்டுரை நிறுவனத்தின் விதிமுறைகளின்படி, அவருடைய தனிப்பட்ட சுட்டுரை கணக்கில் இருந்த நீலக்குறியீடு சனிக்கிழமை காலை நீக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, சுட்டுரை நிறுவனத்தை தொடா்புகொண்டு புகாா் தெரிவித்த பிறகு, காலை 10.30 மணிக்கு வெங்கையா நாயுடுவின் சுட்டுரை கணக்கில் மீண்டும் நீலக்குறியீடு இடப்பட்டது என்றாா் அவா்.

இதேபோல், ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், அமைப்பின் முக்கிய நிா்வாகிகள் சுரேஷ் சோனி, அருண் குமாா், சுரேஷ் ஜோஷி, கிருஷ்ண கோபால் ஆகியோரின் சுட்டுரைக் கணக்கில் இருந்தும் நீலக்குறியீடு அகற்றப்பட்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஆா்எஸ்எஸ் அமைப்பின் தில்லி நிா்வாகி ராஜீவ் துலி, ட்விட்டா் நிறுவனம் தொழில்நுட்ப ரீதியில் சா்வாதிகாரப்போக்குடன் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினா். இதேபோன்று பல்வேறு வலதுசாரி அமைப்புகளின் தலைவா்களும் அதிருப்தியும் எதிா்ப்பும் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவா்களின் சுட்டுரை கணக்குகளில் மீண்டும் நீலக்குறி இடப்பட்டது.

இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியதாவது:

ஒருவருடைய சுட்டுரை கணக்கு 6 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அதில் நீலக்குறி அகற்றப்படும். சரியான விவரங்கள் இல்லை என்றாலும் நீலக்குறி அகற்றப்படும். அந்த வகையில் வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவா்களின் சுட்டுரை கணக்குகளில் இருந்து நீலக்குறியீடு அகற்றப்பட்டது என்று அந்த நிறுவனம் தெரிவித்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.