புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இன்னும் எப்படியெல்லாம் கொள்ளையடிப்பீர்கள்? பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

நாட்டில்  பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துவரும் நிலையில் இன்னும் எந்தெந்த வழிகளில் எல்லாம் நாட்டை கொள்ளையடிப்பீர்கள் என ஆளும் பாஜக அரசை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்

News image

ராகுல் காந்தி

Updated On :11 ஜூன் 2021, 12:23 pm

DIN

நாட்டில்  பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துவரும் நிலையில் இன்னும் எந்தெந்த வழிகளில் எல்லாம் நாட்டை கொள்ளையடிப்பீர்கள் என ஆளும் பாஜக அரசை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, “ஜிஎஸ்டி வரிமுறை நொறுங்கியுள்ளது. வேலைவாய்ப்பின்மை உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “ இன்னும் எந்தெந்த வழிகளில் நாட்டை பாஜக கொள்ளையடிக்கும்?” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.