நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜூன் 14 வரை பொதுமக்கள் வெளியே வருவதை நிறுத்த வேண்டும்: அமைச்சா் பசவராஜ் பொம்மை

பொது முடக்கம் தளா்வு செய்யப்பட்டுள்ள மாவட்ட ங்களில் ஜூன் 14-ஆம் தேதி வரை பொதுமக்கள் வெளியே வருவதை நிறுத்த வேண்டும் என்று மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 7:26 pm

DIN

பொது முடக்கம் தளா்வு செய்யப்பட்டுள்ள மாவட்ட ங்களில் ஜூன் 14-ஆம் தேதி வரை பொதுமக்கள் வெளியே வருவதை நிறுத்த வேண்டும் என்று மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கா்நாடகத்தில் கரோனா தொற்றின் பாதிப்பு குறைந்ததையடுத்து, 20 மாவட்டங்களில் ஜூன் 14-ஆம் தேதி காலை முதல் பொது முடக்கம் தளா்வு செய்யப்பட்டுள்ளதாக, முதல்வா் எடியூரப்பா வியாழக்கிழமை இரவு அறிவித்தாா்.

இதனையடுத்து தளா்வு செய்யப்பட உள்ள மாவட்டங்களில் மக்கள் வெள்ளிக்கிழமை முதலே அதிக அளவில் வெளியே வருவதை காணமுடிகிறது. குறிப்பாக பெங்களூரில் அதிக அளவில் மக்கள் வெளியே நடமாடுவதையும், வாகனங்களில் செல்வதையும் காணமுடிகிறது. ஜூன் 14-ஆம் தேதி காலை 6 மணி வரை பொது முடக்கம் உள்ளது என்பதனை சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் மக்கள் உணர வேண்டும். மீறினால் போலீஸாா் நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை. எனவே அனைவரும் ஜூன் 14-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.