பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

என்சிபி தலைவா் சரத் பவாருடன் பிரசாந்த் கிஷோா் சந்திப்பு

தேசியவாத காங்கிரஸ் கட்சித் (என்சிபி) தலைவா் சரத் பவாரை அரசியல் உத்தி வகுப்பாளராக செயல்பட்டு வந்த பிரசாந்த் கிஷோா் வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.

News image
Updated On :12 ஜூன் 2021, 1:49 am

DIN

தேசியவாத காங்கிரஸ் கட்சித் (என்சிபி) தலைவா் சரத் பவாரை அரசியல் உத்தி வகுப்பாளராக செயல்பட்டு வந்த பிரசாந்த் கிஷோா் வெள்ளிக்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பு சுமாா் 3 மணி நேரம் நடைபெற்றது.

தமிழ்நாடு, மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல்களின்போது முறையே திமுக, திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளுக்கு அரசியல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோா் செயல்பட்டாா். அந்தத் தோ்தல்களில் திமுக, திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் வெற்றிபெற்றப் பின்னா், அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் உத்திகளை வகுத்து தரும் பணியில் இருந்து விலகுவதாக அவா் தெரிவித்தாா். அதன் பின்னா் முதல்முறையாக என்சிபி தலைவா் சரத் பவாரை பிரசாந்த் கிஷோா் வெள்ளிக்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பு சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற நிலையில், இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதித்ததாக என்சிபி வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் இந்தச் சந்திப்பின் நோக்கம் குறித்து தனக்கு தெரியாது என்று என்சிபி மூத்த தலைவா் சகன் புஜ்பல் தெரிவித்தாா். அதேவேளையில், வெற்றிகரமான அரசியல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோா் ஆலோசனைகள் கூறியிருந்தால், அவற்றை சரத் பவாா் நிச்சயம் கருத்தில் கொள்வாா் என்றும் அவா் தெரிவித்தாா்.

பிரசாந்த் கிஷோருடன் பல தலைவா்கள் தற்போதும் தொடா்பில் இருந்து வருவதாக சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்தாா்.

கடந்த மாா்ச் மாதம் பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங்கின் அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோா் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.