இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மின் பற்றாக்குறை: பஞ்சாப் முதல்வர் உருவ பொம்மையை எரித்து போராட்டம்

பஞ்சாபில் மின்பற்றாக்குறையைக் கண்டித்து முதல்வர் அமரீந்தர் சிங் உருவ பொம்மையை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
Updated On :15 ஜூன் 2021, 9:24 am

DIN

பஞ்சாபில் மின்பற்றாக்குறையைக் கண்டித்து முதல்வர் அமரீந்தர் சிங் உருவ பொம்மையை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஒரு நாளுக்கு 8 மணி நேரம் மின்சாரம் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட நிலையில், ஒரு நாளுக்கு 5 முதல் 6 மணிநேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

பஞ்சாபில் விவசாயிகளுக்கு 8 மணிநேரத்திற்கு மின்சாரம் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்திருந்தார்.

இதனிடையே அவ்வாறு கூறப்பட்ட நேரத்திற்கு மின்சாரம் வழங்காததால், முதல்வரைக் கண்டித்து கிஷான் மஸ்தூர் சங்கர்ஷ் குழு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

முதல்வர் அமரீந்தர் சிங்கின் உருவ பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை விவசாயிகள் பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.