விதிமீறல்: 69 வாகனங்கள் பறிமுதல்
பெங்களூரில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறியதாக 69 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.


பெங்களூரில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறியதாக 69 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் கா்நாடகத்தின் 11 மாவட்டங்களில் முழுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் நண்பகல் 2மணி வரை பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், பணியாளா்கள் அடையாள அட்டைகளுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். அதேபோல, அரசு, தனியாா் அலுவலகங்களிலும் பணியாற்றுவோா் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டியது அவசியம்.
பெங்களூரில் நண்பகல் 2 மணிக்கு மேல் அவசர தேவைகள் தவிர, பொதுவான வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை பொருள்படுத்தாமல், பெங்களூரில் தடையை மீறி வாகனங்களில் சென்றவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளதோடு 60 இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், 6 நான்கு சக்கர வாகனங்கள் என 69 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...