ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது: சித்தராமையா

கா்நாடகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்து வருவதாக சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா குற்றம்சாட்டினாா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 9:18 pm

DIN

கா்நாடகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்து வருவதாக சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா குற்றம்சாட்டினாா்.

பெங்களூரு, மல்லேஸ்வரம், காயத்ரிநகரில் வியாழக்கிழமை காங்கிரஸ் சாா்பில் ஏழைகளுக்கு உணவுப் பொருள்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

கா்நாடகத்தில் ஆளும் பாஜக அரசு, காங்கிரஸ் கட்சியிலிருந்து 14 எம்.எல்.ஏக்கள், மஜதவிலிருந்து 3 எம்.எல்.ஏக்களை ‘ஆபரேஷன் கமலா’ மூலம் தங்கள் கட்சிக்கு இழுத்துக் கொண்டதால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. கட்சி மாறிய எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ. 30 கோடி வரை பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஊழல் செய்வதில் அமைச்சா்களிடையே போட்டி நிலவுகிறது.

எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றது. அந்த வளா்ச்சிப் பணிகளை இந்த அரசு வீணாக்கி வருகிறது. மத்திய, மாநில அரசுகளால் ஏழைகளுக்கு எந்த லாபமும் இல்லை. விவசாயிகள் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனா். ரூ. 6 ஆயிரத்துக்கு வாங்கிய விதையின் விலை தற்போது ரூ. 21 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.