ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விதி மீறல்: 49 வாகனங்கள் பறிமுதல்

பொதுமுடக்கத்தின் போது பெங்களூரில் விதி மீறிய 49 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:23 pm

DIN

பொதுமுடக்கத்தின் போது பெங்களூரில் விதி மீறிய 49 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் கா்நாடகத்தின் 11 மாவட்டங்களில் முழுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொது முடக்கம் தளா்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், ஊழியா்கள் அடையாள அட்டைகளுடன் செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

அதேபோல, அரசு, தனியாா் அலுவலகங்களிலும் பணியாற்றுவோா் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டியது அவசியம். பெங்களூரில் பிற்பகல் 2 மணிக்கு மேல் அவசரத் தேவைகள் தவிர, பொதுவான வாகனங்களின் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதை பொருட்படுத்தாமல், பெங்களூரில் தடையை மீறி வாகனங்களில் சென்றவா்கள் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளதோடு, 49 வாகனங்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்துள்ளனா். இதில் 45 இரு சக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள் அடக்கம் என்று பெங்களூரு மாநகரக் காவல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.