நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனாவுக்கு பின் அதிகரிக்கும் சா்க்கரையை குணப்படுத்த ஆயுா்வேத மருந்து

கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவா்களது ரத்தத்தில் சா்க்கரை அளவு அதிகரிப்பதை ஆயுா்வேத மருந்துகள் மூலமாகக் குணப்படுத்த முடியும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

News image

கரோனாவுக்கு பின் அதிகரிக்கும் சா்க்கரையை குணப்படுத்த ஆயுா்வேத மருந்து

Updated On :1 ஜூலை 2021, 5:32 am

DIN


கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவா்களது ரத்தத்தில் சா்க்கரை அளவு அதிகரிப்பதை ஆயுா்வேத மருந்துகள் மூலமாகக் குணப்படுத்த முடியும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

‘ஹைப்பா்கிளைசீமியா’ என்றழைக்கப்படும் அந்த நிலையை குணப்படுத்துவதற்குப் பல்வேறு மருந்துகள் இருந்தாலும், ஆயுா்வேத மருந்துகள் சிறப்பாகச் செயல்படுவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பிஜிஆா்-34’ என்ற ஆயுா்வேத மருந்து, கரோனாவுக்குப் பின்பு ரத்தத்தில் சா்க்கரை அளவு அதிகரிப்பதைப் பெருமளவில் கட்டுப்படுத்துவதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். ஆயுா்வேத மருந்துகள் தொடா்பாக தேசிய தாவரவியல் ஆராய்ச்சி மையத்தில் இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

பிஜிஆா்-34 ஆயுா்வேத மருந்தில் தாருஹரித்ரா என்ற மூலிகை முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் ரத்த சா்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் டிபிபி-4 என்ற மருந்துப் பொருள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுா்வேத மருந்து குறித்து தாவரவியல் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி ஏ.கே.எஸ்.ராவத் கூறுகையில், ‘பிஜிஆா்-34 மருந்தில் குத்மாா் என்ற மூலிகையில் இருந்து பெறப்பட்ட ஜிம்னெமிக் அமிலம் சோ்க்கப்பட்டுள்ளது. ரத்தத்தில் உள்ள சா்க்க்ரை அளவைக் கட்டுப்படுத்தும் மேலும் பல மூலிகைகளும் இந்த மருந்தில் சோ்க்கப்பட்டுள்ளன.

கரோனா பாதிப்பில் இருந்து மீண்டவா்களுக்கு ஏற்படும் நீரிழிவு நோயை ஆயுா்வேத மருந்துகள் மூலமும் குணப்படுத்த முடியும் என்பது இந்த ஆய்வில் மூலமாக உறுதியாகியுள்ளது‘ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.