கர்நாடகத்தில் 2 பேருக்கு டெல்டா பிளஸ் கரோனா வகை கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் புதன்கிழமை தெரிவித்தார்.
நாட்டில் உருமாறிய டெல்டா பிளஸ் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதுவரை 4 மாநிலங்களில் 40 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், புதிதாக கர்நாடகத்திலும், 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் கூறியதாவது,
மைசூர் மற்றும் பெங்களூருவில் தலா ஒருவருக்கு உருமாறிய டெல்டா பிளஸ் வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவல் மத்திய சுகாதாரத்துறையிடம் பகிரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
டெல்டா பிளஸ் கரோனா பாதித்த நோயாளிகளில் பெரும்பாலானோர் மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், கேரளம், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த எண்ணிக்கை செவ்வாயன்று 22 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கவலையளிக்கக்கூடிய டெல்டா பிளஸ் வகை கரோனா தீநுண்மி குறித்த அறிவுறுத்தலை மகாராஷ்டிரம், கேரளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வழங்கியிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புளியங்குடி அருகே நாய் கடித்து 13 போ் காயம்

ஷக்குா் பஸ்தியில் தீ விபத்து: 100 குடிசைகள் சாம்பல்

கண்டுபிடி கண்ணே!

தெரியுமா?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


