ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கரோனா மூன்றாம் அலை: ஆட்சியர்களுடன் மகாராஷ்டிர முதல்வர் ஆலோசனை

கரோனா மூன்றாம் அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தி வருகிறார்.

News image

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே (கோப்புப்படம்)

Updated On :24 ஜூன் 2021, 11:37 am

கரோனா மூன்றாம் அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தி வருகிறார்.

நாட்டிலேயே கரோனா நோய்த் தொற்றால் அதிக பாதிப்புக்குள்ளான மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. இதனிடையே, டெல்டா பிளஸ் என்ற வகையால் மூன்றாம் அலை உருவாகும் என மத்திய அரசு எச்சரித்துள்ள நிலையில், மகாராஷ்டிரத்தில் 21 பேருக்கு புதிய வகை கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, புதிய வகை கரோனா கண்டறியப்பட்ட ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், சதாரா, சாங்லி, கோலாப்பூர் மற்றும் ஹிங்கோலி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப்பும் பங்கேற்றதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் மூன்றாம் அலையை எதிர்க்கொள்ள தயாராக இருக்குமாறு சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.