பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜர்

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று சூரத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். 

News image
ராகுல் காந்தி
Updated On :24 ஜூன் 2021, 5:51 am

DIN

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று சூரத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். 

மக்களவைத் தேர்தலின்போது கடந்த ஏப்ரல் 13, 2019 அன்று கர்நாடகத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, 'நீரவ் மோடி, லலித் மோடி... என திருடர்கள் அனைவரும் எப்படி மோடியை பொதுவான குடும்பப் பெயராக கொண்டிருக்கின்றனர்' என்று பேசியதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து பிரதமர் மோடி குறித்தும், மோடி பெயரைக் கொண்ட அனைவரையும் இது இழிவுபடுத்துவதாக உள்ளது என்று கூறி சூரத்தில் பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி, ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்து வந்த சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜூன் 24 ஆம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் ராகுல் காந்தி இன்று நேரில் ஆஜராகியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.