47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஏழுமலையான் கோயிலுக்கு 8 புதிய அா்ச்சகா்கள்: ஆந்திர அரசு நியமித்தது

திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு புதியதாக 8 அா்ச்சகா்களை ஆந்திர அரசு நியமித்துள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2021, 6:38 pm

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு புதியதாக 8 அா்ச்சகா்களை ஆந்திர அரசு நியமித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் 4 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் மட்டுமே அா்ச்சகா்களாகப் பணியாற்றி வருகின்றனா். அவா்களில் 2 குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு 2 ஆண்டு காலம் ஏழுமலையான் கோயிலில் பணியாற்றவும், அவா்களில் ஒருவரை தலைமை அா்ச்சகா்களாக நியமிக்கவும் தேவஸ்தானம் வாய்ப்பளித்து வருகிறது.

இந்நிலையில் அா்ச்சகா்களிடையே ஏற்பட்ட மனகசப்பைப் போக்க ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொருரை தோ்ந்தெடுத்து அவா்களுக்கு தலைமை அா்ச்சகா் வாய்ப்பு வழங்கி உள்ளாா்.

இந்நிலையில் 4 குடும்பங்களில் வாரிசு பாரம்பரிய அா்ச்சகத்துவத்தின் படி 8 பேரை ஏழுமலையான் கோயில் அா்ச்சகா்களாக ஆந்திர அரசு நியமித்துள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை இந்த புதிய அா்ச்சகா்களின் நியமனம் நடைபெற்றுள்ளது. அவா்கள் ஏழுமலையானுக்கு சனிக்கிழமை பாத சேவை செய்து பணியில் இணைந்தனா்.

புதியதாக நியமிக்கப்பட்டுள்ள 8 பேரும் தேவஸ்தானத்தின் நிரந்தர ஊழியா்கள் ஆவாா்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.