விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஜம்மு விமானப்படைத் தளத்தில் தாக்குதல்: உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் ஆலோசனை

ஜம்மு விமானப்படைத் தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

News image
உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் ஆலோசனை
Updated On :29 ஜூன் 2021, 11:38 am

DIN

ஜம்மு விமானப்படைத் தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஜம்மு விமான நிலையத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் பயங்கரவாதிகள் ட்ரோன்கள் மூலமாக இரட்டை வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் நேற்று முன் தினம் (ஜூன் 27) விமானப்படை வீரா்கள் இருவா் காயமடைந்தனா்.

இந்த தாக்குதல் குறித்து உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

பிரதமர் இல்லத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், லாடகிற்கு 4 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள ராஜ்நாத் சிங், லடாகில் உள்ள நிலவரம் குறித்தும் விவரிக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.