ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

ரயில் பயணிகளுக்குத் தடுப்பூசி கட்டாயம்: ரயில்வே

மகாராஷ்டிரத்திலிருந்து கர்நாடகத்திற்கு ரயில் பயணம் மேற்கொள்ள கட்டாயம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image

ரயில் பயணம் மேற்கொள்ளத் தடுப்பூசி கட்டாயம்: ரயில்வே

Updated On :30 ஜூன் 2021, 12:20 pm IST

மகாராஷ்டிரத்திலிருந்து கர்நாடகத்திற்கு ரயில் பயணம் மேற்கொள்ள கட்டாயம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் 72 மணி நேரத்திற்கு மிகாமல் ஆர்டி-பிசிஆர் கரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்திற்கு மாநில அரசுகள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உள்பட்டு அனுமதி வழங்கியுள்ளன.

இந்நிலையில், மகாராஷ்டிரத்திலிருந்து கர்நாடகத்திற்கு ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கட்டாயம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் 72 மணி நேரத்திற்கு மிகாமல் ஆர்டி-பிசிஆர் கரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.